VIDEO: நாயை பார்த்து பயந்த 8 வயது சிறுவனை லிஃப்டில் இருந்து வெளியே இழுத்து அடித்த பெண் கைது

நாயை லிஃப்ட்டிற்குள்ளே கொண்டு வரவேண்டாம் என்று அப்பெண்ணிடம் சிறுவன் கெஞ்சுகிறான். இது தொடர்பாக சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
VIDEO: நாயை பார்த்து பயந்த 8 வயது சிறுவனை லிஃப்டில் இருந்து வெளியே இழுத்து அடித்த பெண் கைது
Published on

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நாய்க்கு பயந்து ஓடியதால், 8 வயது குழந்தையை லிஃப்டில் இருந்து வெளியே இழுத்து பெண் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சிறுவன் லிஃப்ட் உள்ளே நின்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் தனது செல்ல நாயுடன் உள்ளே வருகிறார். அப்போது நாயைப் பார்த்து பயமடைந்த சிறுவன் நாயை லிஃப்ட்டிற்குள்ளே கொண்டு வரவேண்டாம் என்று அப்பெண்ணிடம் கெஞ்சுகிறான்.

இதனால் கோபமடைந்த அப்பெண், சிறுவனை லிப்டிலிருந்து வெளியே இழுத்து அடித்தார். இதனையடுத்து, அந்த சிறுவன் மீண்டும் லிப்டிற்குள் நுழைந்து அழுகிறான்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், அப்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com