அணுசக்தி துறையில் தனியார் முதலீட்டை 100% அனுமதிக்கும் ஷாந்தி மசோதா மக்களவையில் நிறைவேறியது!

இதுவரை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. மின்தேவை அதிகரிப்பே அணுசக்தி மசோதாவுக்கு காரணம்
அணுசக்தி துறையில் தனியார் முதலீட்டை 100% அனுமதிக்கும் ஷாந்தி மசோதா மக்களவையில் நிறைவேறியது!
Published on

அணுசக்தி மசோதா 2025க்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தபோதிலும், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அணுசக்தி துறைக்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அவையில் மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதா அணுசக்தியை விரிவுபடுத்துதல், தனியார் பங்களிப்பை அனுமதித்தல் மற்றும் 2047 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் (GW) அணுசக்தி திறனை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்துறை இதுவரை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே  ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மசோதாமூலம் தனியார் நிறுவனங்கள் அணுசக்தி துறையில் நுழைவதை அனுமதிக்கிறது. 

மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமைச்சர்,

"இந்தியாவில் 60-79% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துகிறோம். மின்தேவை அதிகரிப்பே அணுசக்தி மசோதாவுக்கு காரணம். மேலும் தனியார் பங்களிப்பையும், பாதுகாப்பையும் உறுதிசெய்யவே இந்த மசோதா. அணுசக்தி துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது." எனவும் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com