பாராளுமன்றத்தை விட அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது.. தன்கருக்கு புதிய தலைமை நீதிபதி கவாய் பதில்!

ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசியலமைப்பின் நான்கு மூலைகளுக்குள் செயல்பட வேண்டும்.ஆளும் கட்சி நீதித்துறையை பலவீனப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட வழியாக விளக்க முடியாது
பாராளுமன்றத்தை விட அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது.. தன்கருக்கு புதிய தலைமை நீதிபதி கவாய் பதில்!
Published on

இந்தியாவின் புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய தலைமை நீதிபதி பிஆர் கவாய், அரசியலமைப்பு மட்டுமே உயர்ந்தது என்றும், பாராளுமன்றம் அல்லது நிர்வாகக் குழு தங்கள் கடமைகளைச் செய்யத் தவறும் போதெல்லாம் நீதித்துறை தலையிடும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி மசோதாக்கள் மீது முடிவெடுக்க உச்சநீதிமன்றம் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்தது.

இதனால் கொந்தளித்த துணை ஜனாதிபதி தன்கர் உச்சநீதிமன்றம் சூப்பர் பாராளுமன்றம் போல செயல்படுகிறது என்றும் நீதித்துறை அதன் வரம்புக்குள் தான் இருக்க வேண்டும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார்.

பாராளுமன்றம் எடுத்த கொள்கை முடிவுகளை முறியடிக்க உச்ச நீதிமன்றம் சிர்பூ அதிகாரம் வழங்கும் பிரிவு 141 ஐ ஒரு 'ஏவுகணை'யாகப் பயன்படுத்துகிறது என்றும் விமர்சித்தார்.

இந்நிலையில் இன்றுமுதல் உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்கும் பி.ஆர் கவாய் தி டெலிகிராஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தன்கர் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

அவர் கூறியதாவது, பாராளுமன்றம் மிக உயர்ந்தது என்று சொல்வது நல்ல கூற்று அல்ல. இறுதியில், அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது. நீதித்துறை, பாராளுமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகிய ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசியலமைப்பின் நான்கு மூலைகளுக்குள் செயல்பட வேண்டும். பாராளுமன்றம் செயல்படாதபோது அல்லது நிர்வாகம் தனது கடமைகளைச் செய்யாதபோது மட்டுமே நீதித்துறை அதில் தலையிடும் என்று தெரிவித்தார்.

மேலும், தன்கர் மற்றும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ஆகியோரின் சமீபத்திய கருத்துக்கள், ஆளும் கட்சி நீதித்துறையை பலவீனப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட வழியாக விளக்க முடியாது என்று அவர் வாதிட்டார். அது கட்சியின் (பாஜக) கருத்து அல்ல என்று தான் கருதுவதாகவும் நீதிபதி கவாய் குறிப்பிட்டார்.

 மேலும் நீதித்துறையின் அதிகப்படியான தலையீடு குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில், கொள்கை முடிவுகள் தொடர்பான பொது நல வழக்குகளை கையாள உச்ச நீதிமன்றம் சமீப காலமாக தயங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை நீதிபதி கவாய் நிராகரித்தார்.

நவம்பர் 13 ஆம் தேதி, அவர் தலைமையிலான அமர்வு, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு வழங்காமல் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com