தெலுங்கானா நகராட்சி தேர்தல்: காங்கிரஸ் கட்சி முன்னிலை

448 வார்டுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 240 வார்டுகளில் வெற்றிபெற்றது. பி.ஆர்.எஸ் 140 வார்டுகளிலும், பா.ஜனதா 37 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
தெலுங்கானா நகராட்சி தேர்தல்: காங்கிரஸ் கட்சி முன்னிலை
Published on

தெலுங்கானாவில் நேற்று முன்தினம் 116 நகராட்சிகளில் உள்ள 2,582 வார்டுகளுக்கும், 7 மாநகராட்சிகளில் உள்ள 414 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இன்று மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 448 வார்டுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 240 வார்டுகளில் வெற்றிபெற்றது.

பி.ஆர்.எஸ் 140 வார்டுகளிலும், பா.ஜனதா 37 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் பல வார்டுகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com