

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் முலக்கலச்செருவு பகுதியில் தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த ஜனார்தன் ராவ், கோட்டராஜு, ராஜேஷ், ஸ்ரீனிவாச ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் ஆந்திர மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்த குற்ற செயல்களில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்தார்.