மும்பையில் வெப்பநிலை படிப்படியாக உயரும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

கோடை காலம் தொடங்கும் முன்பே மும்பையில் வெயில் அதிகரித்து வருகிறது.காற்றின் திசை வடமேற்காக சுழல்வதால் வெப்பநிலை அதிகரிக்க வழிவகுக்கிறது.
மும்பையில் வெப்பநிலை படிப்படியாக உயரும்- வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

மும்பை:

மும்பையில் குளிர்காலம் நிறைவு பெறும் தருவாயில் சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் வழக்கத்தை விட வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வழக்கமாக மும்பையில் கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் முடிவடையும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே மும்பையில் வெயில் அதிகரித்து வருகிறது.

இது குறித்து மும்பை வானிலை ஆய்வு மைய இயக்குநர் சுனில் காம்ளே கூறுகையில், எங்கள் அறிவிப்பின் படி வருகிற 4 நாட்களில் மும்பையில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காலை வேளையில் கிழக்கு பகுதியில் இருந்து வீசும் காற்றினால் மும்பையில் வெப்பநிலை குறைவாக இருக்கும்.

நண்பகலுக்கு பிறகு காற்றின் திசை வடமேற்காக சுழல்வதால் வெப்பநிலை அதிகரிக்க வழிவகுக்கிறது. மும்பையில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் இது இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும், என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com