யமுனை நதியில் விஷம்: கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பிய அரியானா கோர்ட்

யமுனை நீரில் விஷம் கலந்ததாக அரியானா அரசுமீது கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது.
யமுனை நதியில் விஷம்: கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பிய அரியானா கோர்ட்
Published on

சண்டிகர்:

டெல்லி மக்களின் குடிநீ்ர் ஆதாரமாக விளங்கும் யமுனை நதி நீரில் விஷம் கலந்ததாக அரியானா அரசு மீது கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், யமுனை நதியில் விஷம் கலக்க முயற்சி எனக்கூறிய கருத்து தொடர்பாக, அரியானா அரசு கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், பிப்ரவரி 17-ம் தேதி சோனிபேட் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால் சட்ட விதிகளின்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com