10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எல்லா பாடங்களிலும் Fail ஆன மகன்.. கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்!

அபிஷேக் 600க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எல்லா பாடங்களிலும் Fail ஆன மகன்.. கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்!
Published on

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள பசவேஸ்வரா இங்கிலீஸ் மீடியம் பள்ளியில் அபிஷேக் சோழச்சகுடா என்ற சிறுவன் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான்.

சமீபத்தில், அவர் தனது பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதினார். சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தன. எல்லா படங்களிலும் ஃபெயில் ஆன அபிஷேக் 600க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.

இருப்பினும், அபிஷேக் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த பிறகு, அவரது பெற்றோர் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. கொண்டாட்டத்தில் அபிஷேக் கேக்கை வெட்டினார்.

இந்த சந்தர்ப்பத்தில், அபிஷேக்கின் பெற்றோர், 'நீ தேர்வில் மட்டும்தான் தோல்வியடைந்தாய். வாழ்க்கையில் இல்லை. நீ மீண்டும் முயற்சி செய்யலாம். வெற்றிக்கான வாய்ப்பும் உள்ளது" என்று ஊக்கப்படுத்தினர்.

பெற்றோரின் ஆதரவை கண்டு அபிஷேக் கண்ணீர் விட்டார். 'நான் தோல்வியடைந்தாலும் என் பெற்றோர் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். நான் மறுபடியும் தேர்வு எழுதுவேன். நான் தேர்வில் வெற்றி பெறுவேன். வாழ்க்கையிலும் வெற்றி பெறுவேன்" என்று அபிஷேக் ஊடகத்திடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com