கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்க ரஷியா உதவி- புதின்

விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்க ரஷியா உதவி- புதின்
Published on

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, இந்தியா- ரஷியா இடையிலான வர்த்தகம், ராணுவத் தளவாடம், உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்க ரஷியா உதவி செய்து வருகிறது என அதிபர் விளாடிமிர் புதின் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் அவர்," கூடங்குளத்தில் 6 அணு உலைகளில் 3 ஏற்கனவே எரிசக்தி வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் 6 அணு உலைகளும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது மலிவான, சுத்தமான மின்சாரம் கிடைக்கும்.

இந்தியாவிற்கு எண்ணெய், நிலக்கரி, எரிவாயு வழங்கும் நம்பிக்கையான நாடு ரஷியா" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com