

டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் IRCTC ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
IRCTC ஊழியர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென வாக்குவாதம் கைகலப்பாக மாறியது, அவர்கள் குப்பைத் தொட்டிகளை வீசி தாக்குதல் நடத்தினர். அத்துடன் பெல்ட்-ஐ கழற்றி அடித்தனர்.
இதை பார்த்த பயணிகள் இது IRCTC ஊழியர்களா அல்லது WWE வீரர்களாக என தலையில் அடித்துக் கொண்டு தப்பித்தும் என ஒதுங்கிச் சென்றனர்.