இந்தியாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று - மத்திய அரசு விளக்கம்

சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இந்தியாவில் தற்போது 257 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று - மத்திய அரசு விளக்கம்
Published on

உலக அளவில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் கொரோனா பாதிப்பு குறித்து இந்திய மக்களை அச்சமடைந்தனர். இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா தொற்று. இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது. நேற்றைய நிலவரப்படி 257 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆனால், அனைவருக்கும் லேசான பாதிப்புகளே உள்ளதாகவும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com