குடியரசு தின விழாவில் கேரள ஆளுநர் பேசும்போது மயங்கிவிழுந்த காவல் ஆணையர்

குடியரசு தின விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கொடியேற்றினார்.மயங்கி விழுந்த காவல் ஆணையரை அங்கிருந்து தூக்கி சென்றனர்.
குடியரசு தின விழாவில் கேரள ஆளுநர் பேசும்போது மயங்கிவிழுந்த காவல் ஆணையர்
Published on

நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையாட்டி நாடு முழுக்க கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர்.

அவ்வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கொடியேற்றினார். பின்னர் கேரள ஆளுநர் உரையாற்றும் போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த திருவனந்தபுரம் காவல் ஆணையர் தாமஸ் ஜோஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் மயங்கி விழுந்த காவல் ஆணையரை அங்கிருந்து வேறு இடத்திற்கு தூக்கி சென்றனர். இதனையடுத்து ஆளுநர் தனது உரையை தொடர்ந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com