

புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தாய்கள்தான் எங்கள் உலகம். அவர்கள் மரியாதைக்குரியவர்கள். பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன்பு ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் மேடையில் எனது தாயாரை அவமானப்படுத்தினார்கள். இந்த துஷ்பிரயோகம் எனது தாயாருக்கு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தாயாருக்கும் அவமானமாகும். அம்மாக்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு அவமானம்.
இவ்வாறு மோடி பேசினார்.