பிரதமர் மோடியுடன் பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசன்ஜ் சந்திப்பு

பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசன்ஜ் கடந்த மாதம் சண்டிகரில் கன்சர்ட் ஒன்று நடத்தினார். அந்த கன்சர்ட்டை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு அர்ப்பணித்திருந்தார்.
பிரதமர் மோடியுடன் பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசன்ஜ் சந்திப்பு
Published on

புதுடெல்லி:

பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசன்ஜ் கடந்த மாதம் சண்டிகரில் கன்சர்ட் ஒன்று நடத்தினார். சண்டிகரில் நடந்த தில்ஜித் இசைக் கச்சேரி அவரது தில்-லுமினாட்டி இந்தியா டூர் 2024-ன் ஒரு பகுதியாகும். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு அவர் கடந்த மாதம் நடந்த கன்சர்ட்டை அர்ப்பணித்திருந்தார்

அப்போது அவர் நடத்திய லைவ் கன்சர்ட்டில் போதுமான வசதிகள் இல்லாமல் திண்டாடினார். இதையடுத்து, நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படாத வரை இந்தியாவில் இனி நேரலை இசைக்கச்சேரிகளை நடத்தமாட்டேன் என அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசன்ஜ் நேற்று சந்தித்தார். அப்போது இருவரும் இசை, கலாசாரம், யோகா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி மற்றும் பாடகர் தில்ஜித் தோசன்ஜ் ஆகியோர் தங்களது எக்ஸ் வலைதளத்தில் சந்திப்பு தொடர்பான படங்களை பதிவிட்டிருந்தனர்.

தில்ஜித் தோசன்ஜ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என பஜ்ரங்கள் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com