பீகாரை போன்று கர்நாடகாவிலும் என்.டி.ஏ.-வுக்கு அதிகாரம் வழங்க மக்கள் காத்திருக்கிறார்கள்: பாஜக தலைவர்

காங்கிரஸ் இல்லாத கர்நாடகா, மாநிலத்திற்கு நல்லது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து காங்கிரஸ் போய்விட்டது.
பீகாரை போன்று கர்நாடகாவிலும் என்.டி.ஏ.-வுக்கு அதிகாரம் வழங்க மக்கள் காத்திருக்கிறார்கள்: பாஜக தலைவர்
Published on

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 243 இடங்களில் 202 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

இதைப்போன்று கர்நாடகாவிலும் பாஜக கூட்டணிக்கு மக்கள் அதிகாரம் வழங்க காத்திருக்கிறார்கள் என பாஜக தலைவர் ஆர். அசோகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆர். அசோகா கூறியதாவது:-

காங்கிரஸ் இல்லாத கர்நாடகா, மாநிலத்திற்கு நல்லது. இந்த மோசமான காங்கிரஸ் போக வேண்டும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து அது போய்விட்டது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அதிகாரம் வழங்கியதுபோன்று, கர்நாடகாவிலும் அதிகாரம் வழங்க மக்கள் தயாராகிவிட்டனர். கர்நாடக மாநில மக்கள் பட்டனை அழுத்த தயாரிவிட்டனர். தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அசோகா தெரிவித்தார்.

கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக இருந்துள்ள நிலையில், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராக வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com