ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கு: நெருக்கடியால் சிஐடி விசாரணை திரும்பப் பெறவில்லை- கர்நாடகா மந்தரி

தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவ் நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.விமான நிலைய பாதுகாப்பு குறைபாடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது.
ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கு: நெருக்கடியால் சிஐடி விசாரணை திரும்பப் பெறவில்லை- கர்நாடகா மந்தரி
Published on

தங்கம் கடத்தில் வழக்கில் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட கர்நாடகா, பின்னர் அதை திரும்பப் பெற்றது. திரும்ப பெற எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில நடிகை ரன்யா ராவ் துபாயில் இருநது கேம்பேகவுடா சர்வதேச நிலையத்திற்கு வந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும்போது அவரிடம் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவரது தந்தை டிஜபி ரேங்கில் உள்ள உயர் அதிகாரி என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் பாதுகாப்பு நெறிமுறைகளை தவறுதலாக பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ரன்யா ராவ் கைது செய்யப்பட்டதும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக சிஐடி விசாரணை நடத்த அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா உத்தரவிட்டார்.

இதற்கிடையே ரன்யா ராவின் தந்தை கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவுக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதில் பங்கு உள்ளதா? என விசாரணை நடத்த கூடுதல் தலைலைச் செயலாளர் கவுரவ் குப்தாவை நியமித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் சிஐடி விசாரணை உத்தரவை உள்துறை அமைச்சர் திரும்பப் பெற்றுள்ளார். சிஐடி விசாரணையை திரும்பப் பெற எந்த நெருக்கடியும் இல்லை என அமைச்சர் ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் பரமேஷ்வரா கூறியதாவது:-

முதலமைச்சர் சித்தராமையா, கூடுதல் தலைலைச் செயலாளர் கவுரவ் குப்தா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். ஆகவே, நாங்கள் எங்களுடைய போலீஸ் துறையின் விசாரணையை (சிஐடி) திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். முதலமைச்சர் உத்தரவிட்ட விசாரணை நடைபெறும்.

இரண்டு தனிப்பட்ட விசாரணை நடைபெறக் கூடாது. இதனால் நாங்கள் திரும்ப பெற்றுள்ளோம். சிஐடி விசாரணை நடத்த எந்த நெருக்கடியும் இல்லை. விசாரணை நடத்த வேண்டும் என்றோ அல்லது, சிஐடி விசாரணையை திரும்பப்பெற வேண்டும் என்றோ யாரும் கேட்கவில்லை. நடந்தது அதுதான். எந்த குழப்பமும் இல்லை.

இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

ரன்யா ராவ் திருமண விழாவில் பரமேஷ்வரா, முதல்வர் சித்தராமையா ஆகியோர் கலந்து கொண்ட படத்தை பாஜக பகிர்ந்துள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கா திருமணங்களுக்கு நாங்கள் போகிறோம்" எனப் பதில் அளித்தார்.

தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இன்று கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com