டி.வி. நடிகையை தரிசனத்திற்கு அனுமதிக்க மாட்டோம்- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அதிரடி

வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏழுமலையானை குலதெய்வமாக கருதுகிறேன்.
டி.வி. நடிகையை தரிசனத்திற்கு அனுமதிக்க மாட்டோம்- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அதிரடி
Published on

ஆந்திரா டி.வி சேனலில் பிரபல தொகுப்பாளினியாக விளங்கி வருபவர் சிவஜோதி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரர் சோனுவுடன் திருப்பதியில் ஏழுமலையான தரிசிக்க வந்தார்.

அப்போது ரூ.10 ஆயிரம் தரிசன டிக்கெட் வாங்கினார். தரிசனத்திற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவஜோதி மற்றும் அவரது சகோதரர் சோனு ஆகியோர் ரூ.10 ஆயிரம் தரிசன டிக்கெட் வாங்கி தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருந்தோம். பிரசாதம் வாங்க நீண்ட நேரம் பிச்சைக்காரர்களைப் போல் காத்திருந்தோம் என வீடியோ எடுத்து வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்ட தேவஸ்தான அதிகாரிகள் சிவஜோதியின் ஆதார் கார்டை முடக்கினர். வருங்காலங்களில் சிவஜோதி ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிவஜோதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய வாயிலிருந்து வார்த்தைகள் தவறாக வந்துவிட்டது. என்னுடைய வீட்டில் ஏழுமலையான் படம் உள்ளது. ஏழுமலையானை குலதெய்வமாக கருதுகிறேன். என் வயிற்றில் வளரும் குழந்தையை கூட ஏழுமலையானாக கருதுகிறேன். எங்கள் குடும்பத்தில் அனைவரும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். என் மீதான தவறுக்கு மன்னித்து விடுங்கள் என பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com