டெல்லி குண்டுவெடிப்பில் எந்த தொடர்பும் இல்லை.. கைது செய்த 3 மருத்துவர்கள் உட்பட நால்வரை விடுவித்த NIA

அரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்தது.டெல்லி சம்பவத்திற்கும் அவர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி குண்டுவெடிப்பில் எந்த தொடர்பும் இல்லை.. கைது செய்த 3 மருத்துவர்கள் உட்பட நால்வரை விடுவித்த NIA
Published on

கடந்த திங்கள்கிழமை மாலை 13 பேர் உயிரிழந்த டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்தது.

கைதுசெய்யப்பட்ட  மருத்துவர்கள் ரெஹான், முகமது மற்றும் முஸ்தகிம் ஆகிய மூவைரயும், உர வியாபாரி தினேஷ் சிங்கிளா என்பவரையும் 3 நாள் தொடர் விசாரணைக்குப் பிறகு இன்று NIA இறுதியாக விடுவித்தது.

டெல்லி குண்டுவெடிப்புகளுடன் எந்த குறிப்பிட்ட தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி மருத்துவர் உமர் உன்-நபியுடன் அவர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருந்ததா என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், டெல்லி சம்பவத்திற்கும் அவர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு உமருடன் பழகியிருந்தாலும், சமீப காலங்களில் அவர்களுக்கு எந்த தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே, அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் சில நாட்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று NIA தெரிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com