பீகாரில் தொகுதி பங்கீடு முடிந்த பிறகும் NDA கூட்டணிக்குள் தோழமை கட்சிகள் அதிருப்தி

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது. ராஷ்டிரிய ஜனத தளம் 101 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களிலும் போட்டியிடுகிறது.
பீகாரில் தொகுதி பங்கீடு முடிந்த பிறகும் NDA கூட்டணிக்குள் தோழமை கட்சிகள் அதிருப்தி
Published on

பீகார் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ராஷ்டிரிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 6 இடங்களிலும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

தொகுதி பங்கீடு செய்யப்பட்ட பிறகும் கூட அந்த கூட்டணியில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் அதன் மற்ற தோழமை கட்சிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு கணிசமாக 29 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதால் மற்ற தோழமை கட்சிகளுக்குள் அதிருப்தி நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக நிதிஷ்குமாரின் கோட்டை என்று சொல்லப்படும் ராஜகீர், சோன்பர்ஸா இடங்களை சிராகின் கட்சி உரிமை கோரி வருவதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்படுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com