இஸ்ரோ- நாசா இணைந்து பூமியை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது

பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட NISAR-ஆல் கண்டறிய முடியும்.ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 30ஆம் தேதி செலுத்தப்படுகிறது.
இஸ்ரோ- நாசா இணைந்து பூமியை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது
Published on

இஸ்ரோ- நாசா இணைந்து பூமியை ஆய்வு செய்யும் NISAR செயற்கைக்கோளை வருகிற 30ஆம் தேதி வானில் செலுத்துகிறது. முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் நாசா இணைந்து இந்த செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்துகிறது. இந்த செயற்கைக்கோள் ஒவ்வொரு 12 நாட்களுக்கும் பூமியை ஸ்கேன் செய்து மேம்பட்ட தரவுகளை வழங்கும். இது 2,392 கிலோ எடை கொண்டது.

பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட NISAR-ஆல் கண்டறிய முடியும். பூமியின் மேற்பகுதியில் ஏற்படும் மாற்றம், பனிப்படல இயக்கம், கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை மேப்பிங் செய்தல் மற்றும் கண்காணித்தல் போன்றவற்றைக்காக இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com