திடீர் பிரேக் போட்டதால் விபத்தில் சிக்கிய கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மந்திரி

நாய் குறுக்கே வந்ததால் டிரைவர் திடீரென காரை திருப்பினார்.இதனால் பின்னால் வேகமாக வந்த கார் மந்திரியின் கார் மீது மோதியது.
திடீர் பிரேக் போட்டதால் விபத்தில் சிக்கிய கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மந்திரி
Published on

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலத்தின் மீன்வளத்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் சஞ்சய் நிஷாத். இவர் கோரக்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆக்ரா நோக்கி நேற்று காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் அதன்மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் காரை திருப்பியுள்ளார். இதையடுத்து பின்னால் வேகமாக வந்த கார் மந்திரியின் கார் மீது மோதியது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மந்திரி சஞ்சய் நிஷாத் காயமின்றி தப்பினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய் மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாக திருப்பிய மந்திரி கார் விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com