சொன்ன வார்த்தையை வாபஸ் பெற்று கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட நட்டா - மாநிலங்களவையில் நடந்த சம்பவம்

ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது கார்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார்.நட்டா உடனடியாக தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கார்கே கோரினார்.
சொன்ன வார்த்தையை வாபஸ் பெற்று கார்கேவிடம் மன்னிப்பு கேட்ட நட்டா - மாநிலங்களவையில் நடந்த சம்பவம்
Published on

பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எதிராக மாநிலங்களவையில் தெரிவித்த கருத்துக்கள் வாக்குவாதத்திற்கு வழிவகுத்தன.

இறுதியில், ஜே.பி. நட்டா தனது கருத்துக்களை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்டதால் சர்ச்சை தணிந்தது.

ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது கார்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார். இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.

கார்கேவின் உரைக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் தனது மன சமநிலையை இழந்து வருவதாக ஜே.பி. நட்டா தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மோடி குறித்த கார்கேவின் கருத்துக்களை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நட்டா கோரினார்.

கார்கே குறித்த நட்டாவின் கருத்துக்களுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நட்டா உடனடியாக தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கார்கே கோரினார்.

இதற்க்கு பதிலளித்த நட்டா, தான் தனது கருத்துக்களை வாபஸ் பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.

இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகவும் பிரபலமான தலைவர் என்றும், கார்கே தனது நிலையை மீறி அத்தகைய மோடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும் நட்டா வருத்தம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com