எதிர்த்து கேள்வி கேட்காமல் இருக்க இளைஞர்களை சமூக ஊடகங்களுக்கு அடிமையாக்கும் மோடி - ராகுல் தாக்கு

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்குவதற்கு அடியமாக்க மோடி விரும்புகிறார். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்கள் தனது அரசை கேள்வி கேட்க கூடாது என்று விரும்புகிறார்.
எதிர்த்து கேள்வி கேட்காமல் இருக்க இளைஞர்களை  சமூக ஊடகங்களுக்கு அடிமையாக்கும் மோடி - ராகுல் தாக்கு
Published on

கல்வி, வேலைவாய்ப்பு பிரச்சினை குறித்து கேள்வி கேட்காமல் இருக்க இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அடிமையாக வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பீகார் தேர்தலை முன்னிட்டு அவுரங்காபாத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் சமூக ஊடகங்களில் போதை பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார்.

உங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்குவதற்கு அடியமாக்க மோடி விரும்புகிறார். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்கள் தனது அரசை கேள்வி கேட்க கூடாது என்பதற்காக மோடி இதுபோன்ற சூழ்நிலையை உருவாக்க விருப்புகிறார்.

நிதிஷ் குமாரும் நரேந்திர மோடியும் இந்த மாநில இளைஞர்களை வேலையின்மையில் தள்ளியுள்ளனர். மீண்டும் மீண்டும் வினாத்தாள் கசிவுகள், தகுதியான ஏழை மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்கின்றன" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com