பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியிடம் பேசினேன் - NIAவுக்கு EMAIL அனுப்பிய இளைஞர்

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமைக்கு நான் இ மெயில் செய்துள்ளேன்.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியிடம் பேசினேன் - NIAவுக்கு EMAIL அனுப்பிய இளைஞர்
Published on

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியிடம் பேசினேன் - மஹாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர்

கடந்த 22-ந் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். மிருகத்தனமான இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரின் ஓவியங்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்த ஓவியங்களில் உள்ள ஒருவருடன் தான் ஜம்மு காஷ்மீரில் பேசியதாக மகாராஷ்டிராவை சேர்ந்த ஆதர்ஷ் ராவத் என்ற இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய ஆதர்ஷ் ராவத், "ஏப்ரல் 21 அன்று பஹல்காமி மேகி ஸ்டாலில் நான் நின்று கொண்டிருந்தபோது ஒருவர் என்னிடம் நீங்கள் இந்துவா என்று கேட்டார். உங்களை பார்த்தல் காஷ்மீரி போல தெரியவில்லையே என்று கேட்டார்.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமைக்கு நான் இ மெயில் செய்துள்ளேன். ஆனால் அவர்களிடம் இருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. அவர்கள் என்னை அணுகினால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com