முட்டைக் குழம்பு சமைக்க மறுத்த மனைவி: கணவன் எடுத்த விபரீத முடிவு..!

விரதம் இருப்பதால் முட்டைக் குழம்பு சமைக்க மனைவி மறுப்பு.விரக்தியில் கணவன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை.
முட்டைக் குழம்பு சமைக்க மறுத்த மனைவி: கணவன் எடுத்த விபரீத முடிவு..!
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தில், கணவன் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காக விரதம் இருக்க, கணவன் வாங்கி வந்த முட்டையை சமைக்க மறுப்பு தெரிவித்ததால், அந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி மாவட்டம் சங்கரா கிராமத்தில் திகுரான் என்பவர் விசித்து வந்தார். இவர் நேற்று மாலை முட்டைகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அவற்றை மனைவிடம் கொடுத்து, முட்டைக் குழம்பு தயார் செய்ய கூறியுள்ளார். ஆனால், அன்றைய தினம் (திங்கட்கிழமை) கரு பாத் (Karu Bhaat) விழா. அடுத்த நாள் விரதம் கடைபிடிக்க இருக்கிறேன். இதனால் முட்டைக் குழம்பு சமைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கணவன் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் உடலை பரிசோதனைக்கு அனுப்பி தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகற்காய் சேர்த்து கசப்பாக சமைக்கப்படும் சாப்பாடு கரு பாத் என அழைக்கப்படும். தீஜ் விழாவுக்கு முந்தைய தினம் இதை சாப்பிடுவார்கள். அதற்கு ஆடத்த நாள் நர்ஜாலா விரதம் கடைபிடிப்பார்கள். இதனால் விரதம் கடைபிடிப்பதற்கு முந்தைய நாள் கடைசியாக கரு பாத் சாப்பிடுவார்கள். கணவன் நீண்ட ஆயுளுடன் செழிப்புடன் வாழ்வதற்காக சத்தீஸ்கர் மாநில பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

தன்னுடைய கணவன் நீண்ட ஆயுளுடன் விரதம் இருப்பதற்காக, மனைவி முட்டைக் குழம்பு சமைக்க மறுப்பு தெரிவித்ததால், அந்த கணவனே உயிரை மாய்த்துக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com