பூரி ஜெகநாதர் கோவில் புனித வேப்ப மரக்கட்டையை நாங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும்?: மம்தா பானர்ஜி

திகாவில் நாங்கள் ஜெகநாதர் கோவில் கட்டியதற்கு அவர்கள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறார்கள்?.மேற்கு வங்காளத்தில் ஜெகநாதரை வழிபடுவது குற்றமா?.
பூரி ஜெகநாதர் கோவில் புனித வேப்ப மரக்கட்டையை நாங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும்?: மம்தா பானர்ஜி
Published on

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. 12ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாகும். இந்த கோவில் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது. பூரி ஜெகநாதர் கோவிலைப் போன்று, மேற்கு வங்கத்தில் உள்ள திகா என்ற இடத்தில் ஜெகநாதர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் சிலை பிரதிஷ்டை கடந்த 30ஆம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவில் பூரி ஜெகநாதர் கோவிலைச் சேர்ந்த பல பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே ஸ்ரீகெஜநாதர் கோவில் நிர்வாகம், மூத்த பணியாளரிடம் பூரி ஜெகநாதர் கோவில் புனித வேப்பமரத்தின் உபரி பாகங்கள் திகா கோவில் சிலை செய்வதற்கான பயன்படுத்தப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே ஒடிசாவில் வேலைபார்த்து வரும் பெங்காளி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக தற்போது பூரி ஜெகநாதர் கோவில் புனித வேப்ப மரக்கட்டையை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டுகின்றனர் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

நாங்கள் ஏன் திருட்டு வேப்ப மரக்கட்டையை பயன்படுத்த வேண்டும்? வேப்ப மரக்கட்டைக்கான வளங்களை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலம் ஆதாரமற்றவை. ஏற்றுக்கொள்ள முடியாதது.

திகாவில் நாங்கள் ஜெகநாதர் கோவில் கட்டியதற்கு அவர்கள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறார்கள்?. மேற்கு வங்காளத்தில் ஜெகநாதரை வழிபடுவது குற்றமா?.

ஒடிசாவிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மேற்கு வங்கத்தில் அமைதியாக வேலை செய்வது போல, வங்காளத்தைச் சேர்ந்தவர்களும் ஒடிசாவில் வேலை செய்கிறார்கள். பெங்காளி மொழி பேசுவதனால் மட்டுமே தொந்தரவுக்கு உள்ளாகுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மேற்கு வங்க டிஜிபி, ஒடிசா டிஜிபி-யிடம் இது தொடர்பாக பேசுவார். எங்களுடைய மக்கள் தாக்குப்படுவதை நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com