வருமானத்துக்கு அதிகமாக சொத்து- 8 அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை

அதிகாரிகளின் வீடுகளில் அடிக்கடி லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.8 அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து- 8 அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை
Published on

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகளின் வீடுகளில் அடிக்கடி லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்றும் 8 அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி பெங்களூருவில் போக்குவரத்து துறை இணை இயக்குனர் ஷோபா, சிக்கமகளூரு மாவட்டம் கடூர் நிர்வாக மருத்துவ அலுவலர் டாக்டர் உமேஷ், பிதார் மாவட்ட நீர்பாசன துறை பொறியாளர் ரவீந்திரன், பெலகாவி மாவட்டம் கானாபூர் தாசில்தார் பிரகாஷ் ஸ்ரீதர், தும்கூரில் ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ. ராஜூ, பெல்லாரி தாலுகா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி லோகேஷ், உள்பட 8 அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com