வீட்டிற்குள் சகஜமாக வந்த சிங்கம் - தூக்கம் தொலைத்த கிராம வாசிகள்

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு சிங்கம் விரட்டப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வீட்டிற்குள் சகஜமாக வந்த சிங்கம் - தூக்கம் தொலைத்த கிராம வாசிகள்
Published on

ஒருவரின் வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக வந்த சிங்கத்தால் கிராம மக்கள் தங்களின் தூக்கத்தை தொலைத்த சம்பவம் குஜராத்தில் நடைபெற்றுள்ளது.

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் கோவாயா கிராமத்தை சேர்ந்தவர் ராம்பாய். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களின் வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக சிங்கம் ஒன்று நுழைந்துள்ளது. சமையறையின் சுவரின் மேல் அமர்ந்து கொண்டு இருந்த சிங்கத்தை பார்த்த குடும்பத்தினர் அலறி அடித்து ஓடினர். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து சிங்கத்தை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு சிங்கம் விரட்டப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com