அப்பா நல்லவர், நான் ஒரு ரவுடி: தொண்டர்களிடம் ஆவேசம் அடைந்த கவிதா

பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் சார்பில் காமாரெட்டி பகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்பா நல்லவர், நான் ஒரு ரவுடி: தொண்டர்களிடம் ஆவேசம் அடைந்த கவிதா
Published on

ஐதராபாத்:

பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் சார்பில் காமாரெட்டி பகுதியில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் எம்.எல்.சியான கவிதா பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நீங்க தைரியமா இருங்க. உங்களை மிரட்டுறவங்களோட பெயர்கள் 'பிங்க் புக்'ல எழுதப்படும். நாங்க அவங்களை விட்டுட மாட்டோம்.

கே.சி.ஆர் சார் நல்லவங்க. ஆனா நான் ஒரு ரவுடி. நாங்க எந்த விலை கொடுத்தாலும் இங்க இருந்துட மாட்டோம்.

பன்ஸ்வாடால உங்களை தொந்தரவு பண்ணி காவல் நிலையத்துக்கு இழுத்துட்டு போறவங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்.

நாங்க ஆட்சியில இருந்தப்போ எந்த அட்டூழியமும் செய்யவில்லை. மக்களுக்கு நல்லது செய்தோம், வளர்ச்சியும் செய்தோம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com