இந்தியா மிகவும் பாதுகாப்பானது- ரஷிய பெண் புகழாரம்

பெங்களூரு தற்போது தனது இல்லமாக மாறி விட்டதாக உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.இந்தியா தனக்கு 3 அற்புதமான பாடங்களை கற்று தந்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியா மிகவும் பாதுகாப்பானது- ரஷிய பெண் புகழாரம்
Published on

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள முக்கியமான இடங்களை சுற்றி பார்த்து விட்டு செல்வார்கள். இங்கிருந்து செல்லும்போது மறக்க முடியாத நினைவுகளையும் சுமந்து செல்வார்கள்.

இந்நிலையில் ஒரு வருடம் இந்தியாவில் தங்கலாம் என நினைத்து வந்த ரஷியாவை சேர்ந்த லூலியா அஸ்லமோவா என்ற பெண் கடந்த 11 ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில், இந்தியாவின் மீதான தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். இந்திய பாரம்பரிய உடையில், நெற்றியில் பொட்டு வைத்து வீடியோவில் காட்சி அளிக்கும் அவர், பெங்களூரு தற்போது தனது இல்லமாக மாறி விட்டதாக உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

மேலும் இந்தியா தனக்கு 3 அற்புதமான பாடங்களை கற்று தந்ததாகவும் அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்தியாவின் விருந்தோம்பல் பண்பை புகழ்ந்துள்ள அவர், இந்தியா காந்த சக்தி கொண்ட நாடு என புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா மிகவும் பாதுகாப்பானது எனவும் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com