#Holi2026 4 வயது பேரன் மீது கொதிநீரை ஊற்றிய கொடூர பாட்டி

மருத்துவர்கள் 45% தீக்காயங்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.
#Holi2026 4 வயது பேரன் மீது கொதிநீரை ஊற்றிய கொடூர பாட்டி
Published on

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் கோரடி பகுதியில் புதன்கிழமை நான்கு வயது சிறுவனுக்கு ஹோலி பண்டிகை மிகவும் கொடூரமாக மாறியது. சிறுவன் தன்மீது வண்ண நீரை தெளித்ததால் கோபமடைந்த அவனது பாட்டி அவன் மீது வெந்நீரை ஊற்றினாள்.

மார்ச் 3-ஆம் தேதி ஆராம்ஷின் பகுதியின் வார்டு எண் 2-இல் நடந்த இந்த சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சிறுவன் தனது வீட்டிற்கு வெளியே வண்ணப்பூச்சு நிரப்பப்பட்ட ஸ்ப்ரே பாட்டிலுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, சூடாக்கப்பட்ட தண்ணீரை வாளியில் நிரப்பிக் கொண்டிருந்த அவனது பாட்டி சிந்து தாக்கரே மீது தவறுதலாக தெளித்தான். இதனால் கோபமடைந்த பாட்டி, சிறுவன் மீது கொதிக்கும் நீரை ஊற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

வெந்நீர் ஊற்றியதை அடுத்து இடுப்புக்குக் கீழே பலத்த தீக்காயங்களுக்கு ஆளான சிறுவன், நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் 45% தீக்காயங்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். அந்தப் பெண் மீது குற்றப்பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வீடியோவில், கருப்பு சேலையில் சிந்து தண்ணீர் நிறைந்த வாளியுடன் நடந்து செல்வது காட்டப்பட்டுள்ளது. குழந்தை அவளை நெருங்கி வந்து அவள் மீது வண்ணங்களைத் தெளிக்க முயற்சிக்க, அவள் வாளியிலிருந்து தண்ணீரை அவன் மீது எறிந்தாள். குழந்தை வலியால் அலறிக் கொண்டு அந்தப் பெண்ணிடமிருந்து குதிக்கிறது. குளிர்ந்த நீர் இருந்த மற்றொரு பெண், வாளியுடன் வந்து, குழந்தையின் வலியைக் குறைக்க குளிர்ந்த நீரை ஊற்றுகிறாள். விரைவில் பாட்டியும் சேர்ந்து குழந்தையின் தீக்காயங்களில் குளிர்ந்த நீரை ஊற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com