ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் பேரன் மணாலியில் மர்ம மரணம்!

குலி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல்
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் பேரன் மணாலியில் மர்ம மரணம்!
Published on

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரனின் பேரன் வீர் சோரனின் திடீர் மரணம் அம்மாநில அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பாய் சோரனின் மகன் பாபுலால் சோரனின் மகன் வீர் சோரன். இவர் பிப்.22 அன்று தனது நண்பர்களுடன் மணாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் பிப்.24 அன்று வெளியில் சென்றுவிட்டு ஹோட்டலுக்கு திரும்பிய சிறிதுநேரத்திலேயே வீர் சோரனின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. உடனே அவர் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து உடனடியாக நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மரணத்திற்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை. தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குலி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தீவிர குளிர் அல்லது திடீர் உடல்நலப் பிரச்சினை ஆகியவை சாத்தியமான காரணங்களாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும். இந்த துயரச் சம்பவத்திற்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com