விரைவில் பா.ஜ.க.வில் இணைகிறார் மூத்த காங்கிரஸ் தலைவர்: அசாம் முதல் மந்திரி

அசாம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மாநில காங்கிரசில் தனக்கு உரிய பொறுப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.
விரைவில் பா.ஜ.க.வில் இணைகிறார் மூத்த காங்கிரஸ் தலைவர்: அசாம் முதல் மந்திரி
Published on

கவுகாத்தி:

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுடன் சேர்த்து அசாமுக்கும் வரும் ஏப்ரலில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கிடையே, அசாம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா அக்கட்சியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், கட்சித் தலைமையால் புறக்கணிக்கப்பட்டதாகவும், மாநில காங்கிரசில் தனக்கு உரிய பொறுப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் அசாம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பூபேன் குமார் போராவுக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்திருக்கின்றன. பா.ஜ.க.வில் போரா சேர்ந்தால் உடனடியாக அவருக்கு சீட் தரப்படும். பிப்ரவரி 22ம் தேதி போரா பாஜகவில் சேர உள்ளார். இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் போராவிடம் பேசி வருகிறார் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com