தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் ரூ.3000 பொங்கல் பரிசு - ஆனால்...

போதிய நிதி இல்லை என மத்திய அரசு கைவிரிப்புரூ.8 ஆயிரம் வழங்கக்கோரி புதுச்சேரி பாஜக கோரிக்கை
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் ரூ.3000 பொங்கல் பரிசு - ஆனால்...
Published on

புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000 அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பரிசுத்தொகை பொங்கலுக்கு பின்னர் அவரவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5000 பொங்கல் பரிசுத்தொகை வழங்க முதலமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த தொகை ரூ.4000மாக குறைக்கப்பட்டது. ஆனால் அதற்கும் ரூ.140 கோடி தேவைப்பட்ட நிலையில் புதுச்சேரி அரசு மத்திய அரசை நாடியது. ஆனால் போதிய நிதி இல்லை என்று மத்திய அரசும் கைவிரித்தது. 

இந்நிலையில் தொகையை ரூ.3000 என குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் ரங்கசாமி. இதனிடையே புதுச்சேரி பாஜக பொங்கல் பரிசாக ரூ.8000 உயர்த்தி வழங்க வேண்டும் என முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தது. ரூ.10,000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார்.

தமிழ்நாட்டிலும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000 வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com