டெல்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம் - ரிக்டரில் 4.0 ஆக பதிவு

இன்று அதிகாலை டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிரதமர் மோடி முன்னெச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி இருந்தார்.
டெல்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம் - ரிக்டரில் 4.0 ஆக பதிவு
Published on

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆக பதிவானது. இது பூமியில் இருந்து 5 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமும் ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. பீகார் மாநிலம் சிவான் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கம் சரியாக 8.02 மணிக்கு ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

முன்னதாக நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com