என்னை இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்: எச்சரித்த ஏக்நாத் ஷிண்டே

பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நிலவுகிறது.பட்னாவிஸ் உடனான சந்திப்புகளையும் ஷிண்டே தொடர்ந்து தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
என்னை இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்: எச்சரித்த ஏக்நாத் ஷிண்டே
Published on

மும்பை:

மகாராஷ்டிரா முதல் மந்திரி பட்னாவிசுக்கும், துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது. பட்னாவிஸ் உடனான சந்திப்புகளையும் ஷிண்டே தொடர்ந்து தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாக இருந்தபோது ஜல்னா நகரில் ரூ.900 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார். அந்தத் திட்டத்தை பட்னாவிஸ் அரசு தற்போது நிறுத்திவைத்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் ஒரு சாதாரண கட்சி தொண்டன். ஆனால் நான் பால் தாக்கரேவின் விசுவாசியும் கூட. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 2022-ல் என்னை சிலர் இலகுவாக எடுத்துக் கொண்டனர். நான் அந்த அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டேன்.

சட்டசபையில் எனது முதல் உரையிலேயே தேவேந்திர பட்னாவிஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவார் என கூறினேன். ஆனால் எங்களுக்கு 232 இடங்கள் கிடைத்தன. அதனால்தான் என்னை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என கூறுகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com