நிலச்சரிவில் உருக்குலைந்த கிராமம் - சத்தம் எழுப்பி 67 பேரின் உயிர்களை காப்பாற்றிய நாய்

மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது. நிலச்சரிவில் கிராமத்தில் உள்ள பல வீடுகள் தரைமட்டமாகின.
நிலச்சரிவில் உருக்குலைந்த கிராமம் - சத்தம் எழுப்பி 67 பேரின் உயிர்களை காப்பாற்றிய நாய்
Published on

இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. மேகவெடிப்பு காரணமாக பெய்த பலத்த மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது.

ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது.இதனால் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

ஜூன் 30 அன்று, நள்ளிரவில் மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது.

நிலச்சரிவிற்கு முன்பு நள்ளிரவில் அங்கிருந்த ஒரு நாய் கடுமையாக குரைத்துள்ளது. நாயின் சத்தைதை கேட்டு முழித்த அதன் உரிமையாளர் வீட்டு சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வருவதை பார்த்துள்ளார்.

உடனடியாக அவர் அந்த நல்லறவில் அந்த கிராமத்தில் உள்ளவர்களை எழுப்பி எச்சரித்துள்ளார். இதனால் கிராமத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் உள்ள பல வீடுகள் தரைமட்டமாகின.

நாயின் சத்தத்தால் சியாதி கிராமத்தின் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புயுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com