மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தியை மிரட்டிய சைபர் கிரைம் கும்பல்.. போலீசில் வழக்குப்பதிவு

ட்ரூகாலரில் போன் செய்தவர் என்னை எண்ணைச் சரிபார்த்தபோது, அது 'தொலைத்தொடர்புத் துறை' என்று தோன்றியுள்ளது.அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தியை மிரட்டிய சைபர் கிரைம் கும்பல்.. போலீசில் வழக்குப்பதிவு
Published on

இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் மாநிலங்களவை எம்.பியுமான சுதா மூர்த்தியிடம் அரங்கேறிய சைபர் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த மாதம் 5 ஆம் தேதி காலை 9:40 மணிக்கு, சுதா மூர்த்திக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

மறுபுறம் பேசிய நபர் தன்னை மத்திய தொலைத்தொடர்புத் துறை ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சுதா மூர்த்தியின் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அந்த எண்ணிலிருந்து சுதா மூர்த்தியின் ஆட்சேபணைக்குரிய விடியோக்கள் சில இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, தனிப்பட்ட தகவல்களை கேட்டும் தொலைத்தொடர்புத்துறை சுதாவின் செல்போன் எண்ணுக்கு அனைத்து வித சேவைகளையும் நிறுத்தப்போவதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.

ட்ரூகாலரில் போன் செய்தவர் என்னை எண்ணைச் சரிபார்த்தபோது, அது 'தொலைத்தொடர்புத் துறை' என்று தோன்றியுள்ளது. இருப்பினும் அந்த நபரின் பேச்சு குறித்து சந்தேகம் அடைந்த சுதா மூர்த்தி சந்தேகம் அடைந்தார்.

இந்த மோசடி முயற்சி தொடர்பாக சுதாமூர்த்தி சார்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com