

மகாரஷ்டிராவின் மும்பையில் புறநகர் ரெயிலில் கல்லூரி பேராசிரியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த அலோக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று மாலந்த் ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்கும்போது ரெயிலில் அவருடன் பயணித்த சக பயணி ஒருவர் அவரது வயிற்றில் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்ப்பியோடியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், ரெயிலில் இருவருக்கும் இடையே சிறிய விஷயத்திற்காக ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்ததாக என்று தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.
ரெயிலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்திலேயே இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.