6 மாநிலங்களுக்கு ரூ.1,066.80 கோடி பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.455.60 கோடி பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்தது. கேரளாவுக்கு ரூ.153.20 கோடி பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்தது.
6 மாநிலங்களுக்கு ரூ.1,066.80 கோடி பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்
Published on

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.455.60 கோடியும் அசாம் மாநிலத்திற்கு ரூ.375.60 கோடியும் கேரளாவுக்கு ரூ.153.20 கோடியும் மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து (SDRF) மத்திய பங்காக வழங்கியுள்ளது.

மேலும், மணிப்பூருக்கு ரூ.29.20 கோடியைம், மேகாலயாவுக்கு ரூ.30.40 கோடியும், மிசோரமுக்கு ரூ.22.80 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது பெய்த அதிகனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இந்த மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com