உ.பி-க்கு ரூ.18,000 கோடி.. பீகாருக்கு ரூ.10,000 கோடி நிதி விடுவிப்பு- தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தெரியுமா?

அனைத்து மாநிலங்களுக்கும் வரிபகிர்வு நிதியாக ரூ.1,01,603 கோடியை மத்திய அரசு விடுவிப்பு.ம.பி-க்கு ரூ.7,976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
உ.பி-க்கு ரூ.18,000 கோடி.. பீகாருக்கு ரூ.10,000 கோடி நிதி விடுவிப்பு- தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தெரியுமா?
Published on

தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வாக ரூ.4,144 கோடியை மத்திய அரசு விடுவித்து அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் வரிபகிர்வு நிதியாக ரூ.1,01,603 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

அதிகபட்சமாக பாஜக ஆளும் உபிக்கு ரூ.18,227 கோடி, பீகாருக்கு ரூ.10,219 கோடி, ம.பி-க்கு ரூ.7,976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தெலங்கானாவிற்கு ரூ.2136 கோடி, கர்நாடகாவிற்கு 3,705 கோடி, கேரளாவிற்கு 1956 கோடி நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக கோவாவிற்கு ரூ.392 கோடி விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com