

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மேலும், பல்வேறு முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும் அவர் அறிவித்தார்.
அதன்படி, எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? என்று இங்கே பார்ப்போம்.
பாதுகாப்பு - ரூ. 4.91 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சி- ரூ. 2.6 லட்சம் கோடி
சுகாதாரம்- ரூ. 98.311 கோடி.
சமூக நலன்- ரூ. 60052 கோடி.
உள்துறை - ரூ.2.3 லட்சம் கோடி.
தகவல் தொடர்பு- ரூ. 95298 கோடி.
கல்வி- ரூ.1.28 லட்சம் கோடி.
வேளாண்மை- ரூ. 1.7 லட்சம் கோடி.
நகர்ப்புற வளர்ச்சி- ரூ. 96777 கோடி.
வணிகம், தொழிற்துறை- ரூ. 65553 கோடி.
அறிவியல்- ரூ. 55679 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.