டெல்லி ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அனைவரும் அவசர வெளியேற்றம்

வெடிகுண்டு மிரட்டல் குறித்து நீதிபதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டெல்லி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
டெல்லி ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அனைவரும் அவசர வெளியேற்றம்
Published on

டெல்லி ஐகோர்ட்டுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை பதிவாளர் ஜெனரலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து நீதிபதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் தங்கள் நீதிமன்ற அறைகளை விட்டு வெளியேறத் தொடங்கினர். இதைத்தொடர்ந்து டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இன்று நடைபெற இருந்த வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் டெல்லி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். நீதிமன்றம் காலி செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஐகோர்ட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com