இந்தியாவில் புழங்கும் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி- ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

போலியான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு வெறிநாய்க்கடி நோயிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்காமல் போகலாம். ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட வெறிநாய்க்கடி தடுப்பூசியின் மாற்றுத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்படுள்ளது.
இந்தியாவில் புழங்கும் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி- ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Published on

இந்தியாவில் ராபிஸ் நோய் தடுப்புக்காக 'அபய்ராப்'(Abhayrab) என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'அபய்ராப்' மருந்து ஐதராபாத்தைச் சேர்ந்த இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஹியூமன் பயோலாஜிகல்ஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் 'அபய்ராய்' தடுப்பூசியின் போலியான தொகுப்புகள் புழக்கத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, 2023-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேத் முதல் இந்தியாவில் Abhayrab என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசியின் போலியான தொகுப்புகள் புழக்கத்தில் உள்ளன.

போலியான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு வெறிநாய்க்கடி நோயிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்காமல் போகலாம். எனவே, அவர்கள் ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட வெறிநாய்க்கடி தடுப்பூசியின் மாற்றுத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்படுள்ளது.

மேலும், 2023-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி முதல் இந்தியாவில் Abhayrab தடுப்பூசியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ்களைப் பெற்றவர்கள் அனைவரும் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com