சொந்த நாட்டில் குறைகளை மறைக்க அண்டை நாடு மீது தாக்குதல் - ஆப்கான் மீதான பாக். தாக்குதல் பற்றி மத்திய அரசு

இறந்த 20 பேரும் பயங்கரவாதிகள் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.தனது நாட்டில் நிலவும் உள்நாட்டுத் தோல்விகளையும் குறைகளையும் மறைக்கவே தாக்கியுள்ளது.
சொந்த நாட்டில் குறைகளை மறைக்க அண்டை நாடு மீது தாக்குதல் - ஆப்கான் மீதான பாக். தாக்குதல் பற்றி மத்திய அரசு
Published on

ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளான நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் பாகிஸ்தான் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளின் 7 மறைவிடங்களை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இறந்த 20 பேரும் பயங்கரவாதிகள் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பன்னு மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் சமீபத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஆனால் கொல்லப்பட்டவர்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதலை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் தனது நாட்டில் நிலவும் உள்நாட்டுத் தோல்விகளையும் குறைகளையும் மறைக்கவே, அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மீது இத்தகைய தாக்குதல்களை நடத்தி திசைதிருப்பும் வேலையை செய்கிறது.

புனித ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு என்றும் இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும்" என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com