சந்திரபாபு நாயுடு பெரிய திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் திறன் கொண்டவர்: பிரதமர் மோடி

அமராவதியை வெறும் நகரமாக மட்டுமல்லாமல், நிறைவேறிய கனவாகவும் நான் பார்க்கிறேன்.மரபும் வளர்ச்சியும் இணைந்த ஒரு இடமாக அமராவதி உள்ளது.
சந்திரபாபு நாயுடு பெரிய திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் திறன் கொண்டவர்: பிரதமர் மோடி
Published on

பிரதமர் மோடி இன்று மாலை ஆந்திர பிரதேச மாநிலம் அமராவதி சென்றார். நின்று போன அமராவதி திட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்தார். மொத்தமாக 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சயில் பிரதமர் பேசியதாவது:-

* அமராவதியை வெறும் நகரமாக மட்டுமல்லாமல், நிறைவேறிய கனவாகவும் நான் பார்க்கிறேன்

* மரபும் வளர்ச்சியும் இணைந்த ஒரு இடமாக அமராவதி உள்ளது.

* ஆந்திராவில் இன்று தொடங்கப்பட்ட ரூ.60,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் விக்சித் பாரத்திற்கான அடித்தளம்

* அமராவதி வெறும் நகரம் அல்ல. எனர்ஜழி, ஆந்திராவை 'நவீன பிரதேசமாக' மாற்றும்.

* ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெரிய அளவிலான திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் திறன் கொண்டவர்

* அமராவதி எதிர்காலத்தில் ஐடி, செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் முன்னணி நகரமாக மாறும்.

* உள்கட்டமைப்பு மிக வேகமாக நவீனமயமாக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com