இங்கிலாந்து, இஸ்ரேல் செல்ல பஞ்சாப் மாநில முதல்வருக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு

பஞ்சாப் மாநில முதல்வர் இங்கிலாந்து, இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார்.மத்திய வெளியுறவுத்துற அமைச்சகம் அனுமதி கொடுக்கவில்லை எனத் தகவல்.
இங்கிலாந்து, இஸ்ரேல் செல்ல பஞ்சாப் மாநில முதல்வருக்கு மத்திய  அரசு அனுமதி மறுப்பு
Published on

முதலீட்டை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் செல்ல பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா ஆகியோருக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி வழங்க மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், இதுபோன்ற அனுமதி மறுப்பு இது முதல்தடவை அல்ல எனவும் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதம் முதலமைச்சர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் செல்ல உள்ளனர். அவர்களுடன் சில அரசு அதிகாரிகளும் செல்ல உள்ளனர். அனுமதி கொடுக்கப்பட்டால் சரியான தேதி இறுதி செய்யப்படும். எனினும் மத்திய அரசு அரசியல் அனுமதி கொடுக்க மறுத்துள்ளது. காரணம் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள சீனியர் தலைவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து அரசியல் அனுமதி பெறுவது அவசியமாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com