ஒரு பாடலால் நின்ற திருமணம்.. முன்னாள் காதலியின் நினைவு வந்ததால் மணமகன் எடுத்த பகீர் முடிவு

தனது முன்னாள் காதலைப் நினைத்து மனம் வருந்தத் தொடங்கினார்.'ஏ தில் ஹை முஷ்கில்' படத்தில் வரும் காதல் முறிவு பாடலாகும்.
ஒரு பாடலால் நின்ற திருமணம்.. முன்னாள் காதலியின் நினைவு வந்ததால் மணமகன் எடுத்த பகீர் முடிவு
Published on

திருமணத்தில் ஒலிக்கப்பட்ட பாடலால், முன்னாள் காதலின் நினைவு வந்து மணமகன் ஒருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

டெல்லியில் நடந்த ஒரு திருமணத்தின்போது DJ 'சன்னா மெரேயா' என்ற பாடலை பிளே செய்தார்.

இந்தப் பாடலைக் கேட்டதும், மணமகன் உணர்ச்சிவசப்பட்டு, தனது முன்னாள் காதலைப் நினைத்து மனம் வருந்தத் தொடங்கினார்.

இதனால் அவர் திருமணத்தை நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலவிதமான கருத்து தெரிவித்து வருகின்றனர்

'சன்னா மெரேயா' என்பது ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான 'ஏ தில் ஹை முஷ்கில்' படத்தில் வரும் காதல் முறிவு பாடலாகும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com