ஜன்னல் கம்பியில் தொங்கிய உடல்.. திருமணமான 3 மாதத்தில் கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவி - சிக்கியது எப்படி?

அவர்கள் கை கால்களைப் பிடித்துக் கொள்ள, ஜோதி அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.மஃப்லரைப் பயன்படுத்தி அவரது உடலை ஜன்னல் கம்பியில் கட்டித் தொங்கவிட்டுள்ளனர்.
ஜன்னல் கம்பியில் தொங்கிய உடல்.. திருமணமான 3 மாதத்தில் கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவி - சிக்கியது எப்படி?
Published on

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் யாதவ் (33). இவர் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார்.

இவர் ஜோதி என்ற பெண்ணை கடந்த 9 வருடங்களாக காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின் பின் ஜோதிக்கும் ஜிதேந்திரனுக்கும் இடையே அடிக்கடி பணப் பிரச்சினை காரணமாகத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஜனவரி 26 அன்று ஏற்பட்ட தகராறின் போது, ஜோதி தனது பெற்றோர் மற்றும் சகோதரரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அவர்கள் ஜிதேந்திரனின் கை கால்களைப் பிடித்துக் கொள்ள, ஜோதி ஆவேசத்தில் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

ஜிதேந்திரன் இறந்தவுடன், இது தற்கொலை என்று நம்ப வைப்பதற்காக, ஒரு மஃப்லரைப் பயன்படுத்தி அவரது உடலை ஜன்னல் கம்பியில் கட்டித் தொங்கவிட்டுள்ளனர்.

பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி நாடகமாடியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நடத்திய விசாரணையில் ஜோதி உண்மையை ஒப்புக்கொண்டார். ஜோதி மற்றும் அவரது பெற்றோரைக் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜோதியின் சகோதரர் தீபக்கைத் தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com