இமாச்சல பிரதேசத்தை புரட்டிப்போட்ட பருவமழை: 69 பேர் பலி, 37 பேர் மிஸ்சிங்- ரூ. 700 கோடி சேதம்

பருவமழை தொடங்கியதில் இருந்து 14 முறை மேகவெடிப்பு.சாலைகள், குடிநீர் திட்டங்கள், மின்சார வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தை புரட்டிப்போட்ட பருவமழை: 69 பேர் பலி, 37 பேர் மிஸ்சிங்- ரூ. 700 கோடி சேதம்
Published on

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்த நிலையில், 37 பேரை காணவில்லை. 110 பேர் காயம் அடைந்துள்ளனர். 700 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மழையால் தத்தளித்து வரும் நிலையில், வருகிற 7ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் மண்டியில் உள்ள துனாக், பக்சயேத் ஆகியப் பகுதிகள் மிகப்பெரிய அளவில் சேதத்தை சந்தித்துள்ளன.

பருவமழை தொடங்கியதில் இருந்து 14 மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகள், குடிநீர் திட்டங்கள், மின்சார வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் அரசு நிற்பதாக சுகு உறுதி அளித்துள்ளார். மேலும், பாதிகப்பட்ட குடும்பங்களுக்கு தங்குமிடத்திற்கு வாடகையாக 5 ஆயிரம் வழங்கப்படும். தேடுதல் மற்றும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com